Wednesday, September 19, 2012

கூடங்குளம் அணு உலையைத் திற! - அணு சக்திக் குறித்த மார்க்சிய நிலைபாடு



அணுசக்தி காலாவதியாகிவிட்டது”, “அணு உலையை மூடுஎன்ற பிற்போக்கு முழக்கத்தை முறியடிப்போம்!

இந்திய அமெரிக்க இராணுவ மற்றும் அணுசக்தி ஒப்பந்தங்களை ரத்துசெய்யப் போராடுவோம்!

கூடங்குளத்தில் ரசியாவின் உதவியோடு நிறுவப்படும் அணுமின் நிலையத்தைத் தொடங்கக்கூடாது என 80ஆம் ஆண்டுகளின் மத்தியிலேயே சில அமைப்புகள் போராட்டம் நடத்தின. கிறித்துவத் திருச்சபைகள், அரசுசாரா தொண்டுநிறுவனங்கள், புதிய இடதுசிந்தனையாளர்கள், மா.லெ. இயக்கத்தைச் சார்ந்த ஒரு சிலர் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.

அணுசக்தியைக் கொண்டு மின்சாரம் தயாரிப்பது ஆபத் தானது, அணுசக்தி என்றாலே அணுகுண்டுதான், அணு உலைக ளால் மனித குலத்திற்கு ஆபத்து, மனிதகுலத்தை மீட்க உடனே அணுசக்தியை ஒழித்திட வேண்டும் என்றும்; இதுவே விஞ்ஞானப் பூர்வமாகச் சிந்திக்கும் யாவரும் எடுக்க வேண்டிய முடிவாகும் என்றும், இதற்கு மாறாக எடுக்கப்படும் எந்த ஒரு முடிவும் மூடத்தனமானது என்றும், மனித நேயத்திற்கு எதிரானது என்றும் அணுசக்தி எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர்.

Thursday, April 19, 2012

ஆற்று நீர் பகிர்தல் - மார்க்சிய லெனினிய பார்வை 2


முல்லைப் பெரியாற்றில் தமிழகத்தின் உரிமையைப் பாதுகாப்போம்!
முல்லைப் பெரியாற்று நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக, தமிழகத்திற்கும் கேரளத்திற்கும் இடையில் சிக்கல் நீடித்து வருகிறது. இவ்வாறு சிக்கல் நிலவுவதற்கான காரணம் என்ன? ஆங்கிலேயே ஏகாதிபத்தியவாதிகளால் இந்த அணை எவ்வாறு கட்டப்பட்டது? முல்லை பெரியாறு அணைக்கான ஒப்பந்தம் தமிழர்களின் நலன்களுக்காக போடப்பட்டதா அல்லது காலனிய ஏகாதிபத்தியவாதிகளின் சுரண்டல் நலன்களுக்காக போடப்பட்டதா? இந்த ஆறு இரண்டு தேசிய இனங்களுக்கு சொந்தமானதா அல்லது ஒரே இனத்திற்கு சொந்தமானதா? ஆற்றில் தமிழகத்தின் உரிமையை எவ்வாறு பாதுகாப்பது? நீர் பற்றாக்குறை மாநிலமான தமிழகத்திற்கு நீர் மிகையாக உள்ள கேரளாவிலிருந்து நீரை பெருவதற்கான சிக்கலுக்கு எவ்வாறு தீர்வுகாண்பது? மேற்கண்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் விடைகாண முல்லைப் பெரியாறு அணைக்கட்டப்பட்ட வரலாற்றையும், ஆங்கிலேய ஏகாதிபத்தியவாதிகளால் போடப்பட்ட ஒப்பந்தத்தின் தன்மை பற்றியும், தற்போது ஏற்பட்டிருக்கும் சிக்கல்களுக்கு தீர்வு காண்பது குறித்தும் பரிசீலனை செய்வோம்!

ஆற்று நீர் பகிர்தல் - மார்க்சிய லெனினிய பார்வை 1

தன்னுரிமையற்ற இந்திய அரசில்
காவிரிச் சிக்கல்
தமிழரின் தேசிய இனச் சிக்கல்
விவசாயிகள் சிக்கல்
தமிழினத்திற்குத் தன்னுரிமை
தமிழக விவசாயிகளுக்குத் தண்ணீர்
உழுபவனுக்கு நிலம்
வழங்கும் ஜனநாயத் திட்டத்திற்காகப் போராடுவோம்